
செய்திகள் மலேசியா
அறிவியல் போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனை வியக்க வைக்கிறது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர் :
இந்தோனேசியா, பாலியில் நடந்த அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 சிறப்பு விருதுகளை வென்று சாதனை படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததார்.
மாணவர்கள் தினேஷா ஜெயபிரகாசம், திவாஷினி எல்.ஜெயபாலன், வேலன் சிவகுமார், ஆஷ்ரி குமரேசன், லெனிஷா ரவிசந்திரன், தாரணி மோகன், தனுஸ்ரீ ஜெயசீலன், கிஷோர் ஜெயசீலன், தருணேஷ் ஜெயசீலன் ஆகியோர் செமினி தோட்ட தமிழ்ப்பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.
இப்போட்டிக்கு 9 மாணவர்களைத் தயாரித்து வழி நடத்திய ஆசிரியர்கள் உமா தேவி, ஷாமினி, ராஜம்மாள் அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
அனைத்துலக ரீதியில் புத்தாக்க மற்றும் அறிவியல் போட்டிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள்.
தமிழ் பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பது இது நிரூபிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் பள்ளி மாணவர்களின் சாதனைகள் என்னை வியக்க வைக்கின்றன.
இப்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அனைத்துலக அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm