செய்திகள் மலேசியா
அறிவியல் போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகளின் சாதனை வியக்க வைக்கிறது: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலாலம்பூர் :
இந்தோனேசியா, பாலியில் நடந்த அனைத்துலக அறிவியல் புத்தாக்கப் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 சிறப்பு விருதுகளை வென்று சாதனை படைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததார்.
மாணவர்கள் தினேஷா ஜெயபிரகாசம், திவாஷினி எல்.ஜெயபாலன், வேலன் சிவகுமார், ஆஷ்ரி குமரேசன், லெனிஷா ரவிசந்திரன், தாரணி மோகன், தனுஸ்ரீ ஜெயசீலன், கிஷோர் ஜெயசீலன், தருணேஷ் ஜெயசீலன் ஆகியோர் செமினி தோட்ட தமிழ்ப்பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.
இப்போட்டிக்கு 9 மாணவர்களைத் தயாரித்து வழி நடத்திய ஆசிரியர்கள் உமா தேவி, ஷாமினி, ராஜம்மாள் அவர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
அனைத்துலக ரீதியில் புத்தாக்க மற்றும் அறிவியல் போட்டிகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்கள்.
தமிழ் பள்ளி மாணவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பது இது நிரூபிக்கிறது என்று அவர் சொன்னார்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் பள்ளி மாணவர்களின் சாதனைகள் என்னை வியக்க வைக்கின்றன.
இப்போது செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அனைத்துலக அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன் என்று அவர் சொன்னார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 19, 2025, 10:24 pm
ஆலயம், சமயப் பிரச்சினைகளில் யார் பெரியவர்கள் என்று பார்த்தால் எதையும் சாதிக்க முடியாது: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 9:01 pm
பிரச்சினைகளில் இருந்து ஆலயங்களை பாதுகாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்: டத்தோ சிவக்குமார்
December 19, 2025, 5:22 pm
இடையூறாக மாறிய தருணம்: குழந்தையின் கண்ணில் காயம்
December 19, 2025, 4:36 pm
11 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமய ஆசிரியர் மீது குற்றச்சாட்டு
December 19, 2025, 4:27 pm
கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற சந்தேக நபரை போலீஸார் தேடி வருகின்றனர்: OCPD அஸ்லி முஹம்மது நூர்
December 19, 2025, 1:09 pm
ஜாலான் கிளாங் லாமாவில் குடிநுழைவு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: 90 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
December 19, 2025, 1:01 pm
