செய்திகள் உலகம்
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு விரைவில் தடை : பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் பதவியேற்ற நாளிலிருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
இதில் ஒரு நடவடிக்கையாக அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து, இங்கிலாந்தில் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2009-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்குப் புகையிலையை விற்க தடை விதிக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் புகை பிடிக்காதவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தங்களது லட்சியம் என்றும் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இங்கிலாந்து அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேஉம், புகை பிடிப்பவர்களின் விழுக்காட்டைக் குறைக்க ஏற்கனவே பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm