செய்திகள் உலகம்
கனடாவின் நடவடிக்கைகள் பிரிட்டன் - இந்தியா வர்த்தக பேச்சை பாதிக்குமா?
லண்டன்:
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா தீவிரமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், இந்தியாவுடனான வர்த்தக பேச்சு பாதிக்கப்படாது என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரம் இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.
இதை இந்தியா அவசர அவசரமாக மறுத்துள்ளது. இரு நாடுகளின் உறவுகளிலும் இந்தப் பிரச்சனை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் லண்டனில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித்தொடர்பாளர் , இந்த விவகாரம் தொடர்பாக கனடா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். கனடா கூறியுள்ளது மிகவும் தீவிரமான
குற்றச்சாட்டாகும். ஆதாரங்கள் இல்லாமல் கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் இந்தியா மீது குற்றம் சட்டமாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த விவகாரத்தால் இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது. அது முன்புபோல தொடரும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி
December 10, 2025, 2:07 pm
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக தடையை ஆஸ்திரேலியா முதல் நாடாக அமல்படுத்தியது
December 7, 2025, 11:26 pm
ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு
December 2, 2025, 8:19 am
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
November 30, 2025, 8:34 pm
