செய்திகள் மலேசியா
டிக் டோக்கில் சமுதாய சீர்கேடுகளை புறக்கணியுங்கள்: மனிதவள அமைச்சர் சிவக்குமார்
கோலசிலாங்கூர் :
சமுதாய சீர்கேடு பதிவுகளை புறக்கணித்து விட்டு நல்ல நல்ல செய்திகளை தாங்கி வரும் செய்திகளை பகிருங்கள் என்று பொதுமக்களை மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் பதிவுகள் அதிக அளவில் டிக் டோக்கில் பகிரப்படுகிறது.
இதனால் சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மைகளும் இல்லை. இதை பார்த்து இளம் தலைமுறையினர் கெட்டு போகிறார்கள். இதற்கு முடிவு கட்டுவது எளிதல்ல.
ஆனால் நம்மால் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளை புறக்கணிக்கலாம் என்று கோலசிலாங்கூர் இரண்டரை மைல் ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் சமய வழிபாட்டிலும் சமயம் சார்ந்த நிகழ்வுகளிலும் அதிக கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது.
சமுதாயம் சார்ந்த தேவராம் வகுப்புகள், டியூஷன் வகுப்புகள், கணினி வகுப்புகள், கராத்தே வகுப்புகளை ஆலய நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் செய்து வரும் இதுபோன்ற நிகழ்வுகளை டிக் டோக்கில் பதிவேற்றம் செய்யுங்கள்.
இது சமுதாயத்தின் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இதை பின்பற்றி மற்ற ஆலயங்களும் சமுதாயம் சார்ந்த பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
இதனால் இந்திய சமுதாயம் பயன் பெறும் என்பதால் பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை அதிக அளவில் பகிரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலயத் தலைவர் கண்ணதாசன், செயலாளர் நாராயணசாமி, ஆலோசகர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am