நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் சீக்கிய மாணவர் மீது தாக்குதல்

டொராண்டோ: 

கனடாவில் சீக்கிய பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து கனடா சென்ற 17 வயது சீக்கிய மாணவர், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பள்ளியில் பயின்று வருகிறார்.

பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பும்போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. கரடியிடமிருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் "ஸ்பிரே' மூலம் அந்த மாணவர் தாக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடா அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset