நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் ஒரு கோலை ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் டுரோசாட் அடித்தார்.

விதாலி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.

நியூகாஸ்டல் அணியினர் 1-0  என்ற கோல் கணக்கில் பிரீன்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset