செய்திகள் வணிகம்
கச்சா எண்ணெய் விலை உயருகிறது: உற்பத்தியை குறைக்க சவூதி - ரஷியா முடிவு
மாஸ்கோ:
நிகழாண்டு இறுதிவரையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 13 லட்சம் பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் முடிவு செய்துள்ளன.
இதனால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்க உள்ளது.
இது குறித்து சவூதி அரேபிய நாட்டு எஸ்பிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மையையும், சமநிலையையும் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை OPEC எடுத்து வருகிறது.
தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் 13 லட்சம் பேரலைக் குறைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகும், கச்சா எண்ணெய்ச் சந்தை நிலவரத்தை சவூதி அரேபிய அரசு உன்னிப்பாக கவனித்து வரும். அதன் அடிப்படையில் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய துணைப் பிரதமரும், அந்த நாட்டின் எரிசக்தித் துறை முன்னாள் அமைச்சருமான அலெக்ஸாண்டர் நோவாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உறுதி செய்வதற்கான ஒபெக் நடவடிக்கைளுக்கு வலு சேர்க்கும் வகையில், தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியில் 13 கோடி பேரலைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளோம்.
தற்போது தினமும் செயல்படுத்தப்பட்டு வரும் 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையும் தொடரும் என்றார் அவர்.
இந்த முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 7:30 am
இலங்கையில் உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் கண்டுபிடிப்பு
April 24, 2024, 12:21 pm
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸை வாங்க ஏர் ஆசியா உட்பட 6 முதலீட்டாளர்கள் போட்டி
April 21, 2024, 2:18 am
செரலாக்கில் அதிக சர்க்கரை இடுபொருள்: ஆய்வுக்கு இந்தியா பரிந்துரை
April 14, 2024, 8:11 am
மும்பை - கொழும்பு நேரடி விமானச் சேவையை தொடங்கியது இன்டிகோ
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am