செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஜி 20 உச்சிமாநாட்டில் வைக்க பிரம்மாண்ட நடராஜர் சிலை டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது
தஞ்சை:
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாடு அரங்கின் முகப்பில் வைப்பதற்காக சுவாமிமலையில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட நடராஜர் சிலை புதுடெல்லிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
புதுடெல்லி பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் 7, 8, 9-ம் தேதிகளில் ஜி 20 உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு அரங்கின் முன்பு, புதுடெல்லியில் உள்ள இந்தியன் நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் சார்பில் நடராஜர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு கும்பகோணம் வட்டம், சுவாமி மலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக் கூடத்தில் இந்தச் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கியது.
தற்போது 75 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்று காலை, இந்திய நேஷனல் சென்டர் ஆஃப் ஆர்ட் செயலாளர் ஆர்ச்சல் பாண்டியா தலைமையில் வந்த குழுவினர், அந்த சிலையை பெற்றுக் கொண்டனர்.
அந்த சிலை முழுவதும் போர்த்தப்பட்டு லாரி மூலம் புது டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 5:01 pm
தமிழகத்தில் நீட் தோ்வு இன்று தொடங்கியது
May 5, 2024, 10:54 am
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டது: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
May 5, 2024, 10:48 am
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am