நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கணவனின் மர்ம உறுப்பைத் துண்டித்த மனைவி - நஷ்ட ஈடு வழங்க கணவன் கோரிக்கை

ஜகார்த்தா: 

இந்தோனேசியா நாட்டில் கணவனின் மர்ம உறுப்பைத்  துண்டித்த மனைவி நஷ்ட ஈடு வழங்க கோரி கணவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

சம்பந்தப்பட்ட கணவருக்கு 550  மில்லியன் ரூப்பியா அல்லது வெ 167, 586 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

ஆயுட்கால மாற்றுத்திறனாளியாக மாறியிருக்கும் கணவருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதனை கணவரின் வழக்கறிஞர் அஜி மஸ்தோதோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தரப்பிடம் வழக்கறிஞர்கள் சரிபார்க்க வேண்டும். மேலும், அரச தரப்பு வழக்கறிஞர் குழுவின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, கணவன் உறங்கிக்கொண்டிருந்த போது மனைவி அவரின் மர்ம உறுப்பினை துண்டித்தார். 

இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset