நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து விளையாட்டு பொருட்களில் திருச்சிக்கு தங்கம் கடத்தல்

திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 12.84 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மலேசிய தலைநகர் கோலால்ம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தின் தங்கம் கடத்தப்படுவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடிப்படையாக கொண்டு பயணி ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 216.500 கிராம் எடையுள்ள  24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விளையாட்டுப் பொருட்களில் மறைத்து அவர் அத்தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

இதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் சமீப காலமாக திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு நாணயம், பறவைகள், பாம்புகள் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பயணிகள் குருவி என்ற போர்வையில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் அதிகரித்துள்ளது என்ற சுங்கத்துறை அதிகாரிகள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset