நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கோயில்களில் புத்த மடங்களைத் தேட வேண்டியிருக்கும்: சுவாமி பிரசாத் மௌரியா

லக்னோ:

மசூதிகளில் கோயில்களைத் பாஜக தேடிக்கொண்டிருந்தால், வரும் நாள்களில் மக்கள் கோயில்களில் புத்த மடங்களைத் தேடும் நிலை ஏற்படும் என்று சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலர் சுவாமி பிரசாத் மௌரியா கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், புரியில் உள்ள ஜகந்நாதர், கேரளத்தில் உள்ள ஐயப்பன், மகாராஷ்டிரத்தில் உள்ள விடோபா கோயில்கள் அனைத்தும் புத்த மடங்களை இடித்து கட்டப்பட்டன.

எட்டாம் நூற்றாண்டு வரை இவை புத்தமடங்களாக இருந்தன. இதற்கான நிறைய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

கோயில்களை புத்த மடங்களாக்குவது என்னுடைய நோக்கமில்லை. ஆனால், மசூதிகளில் கோயில்களை பாஜக தேடினால், ஏன் புத்த மடங்களை கோயில்களில் தேடக் கூடாது ?

மசூதிகளில் கோயில்களை தேடுவதில் பாஜகவினர் சதி செய்கிறார்கள். இது அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset