செய்திகள் இந்தியா
ஹிந்து பரிஷத்தினருக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் கடுமையான மோதல்; 3 பேர் பலி: ஊரடங்கு அமல்
நூஹ்:
ஹரியாணா மாநிலத்தின் நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபரிதாபாத் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் ஆகியனவற்றிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை, இணையதள முடக்கம்:
ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூஹ். இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது.
இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழுவுடன் விஸ்வ ஹிந்து பர்ஷத்தினர் கடுமையாக மோதினர்.
தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இருந்த உள்ளூர் இளைஞர்களுக்கும் ஊர்வலத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கிடைக்க போலீஸார் அங்கு குவிந்தனர்.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm