செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் கொடூரம்: 2 கோயில் பணியாளர்கள் கைது
சாட்னா:
மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் கொடூர வன்கொடுமை செய்ததாக மெய்ஹார் நகரத்தின் கோயில் பணியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாட்னா நகரில் உள்ள பிரபல கோயிலில் பணிபுரிந்து வந்த ரவீந்தர குமார் ரவி மற்றும் அதுல் பாதோலியா ஆகிய இருவர், அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுமியிடம் கொடூர பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
பற்களால் கடிக்கப்பட்டும், பிறப்பு உறுப்புகளில் கொடூரமாக தாக்கப்பட்டும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நீதிமன்ற காவலில் அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களின் செயலால் கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை வருத்தம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm