நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்திய பிரதேசத்தில் சிறுமிக்கு பாலியல் கொடூரம்: 2 கோயில் பணியாளர்கள் கைது

சாட்னா:

மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் கொடூர வன்கொடுமை செய்ததாக  மெய்ஹார் நகரத்தின் கோயில் பணியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாட்னா நகரில் உள்ள பிரபல கோயிலில் பணிபுரிந்து வந்த ரவீந்தர குமார் ரவி மற்றும் அதுல் பாதோலியா ஆகிய இருவர், அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுமியிடம் கொடூர பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

பற்களால் கடிக்கப்பட்டும், பிறப்பு உறுப்புகளில் கொடூரமாக தாக்கப்பட்டும்  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களின் செயலால் கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset