செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியா இலங்கை இடையேயான படகு போக்குவரத்து தாமதம்
கொழும்பு:
இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் படகுச் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகத்தை இந்திய அரசு மாற்றியதால் அச்சேவை நடைமுறைக்கு வருவதில் மேலும் தாமதமாகும் என இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிரிபலா டி சில்வா தெரிவித்தார்.
புதுச்சேரியில் அமைந்துள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காங்கேசன்துரை துறைமுகத்துக்கு இந்தியா-இலங்கை பயணிகள் படகுச் சேவை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
காரைக்கால் துறைமுகத்துக்குப் பதிலாக தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் படகுச் சேவைக்காகப் பயன்படுத்த இந்திய அரசு முடிவெடுத்தது.
இதையடுத்து, அத்துறைமுகத்தில் வேண்டிய வசதிகளை மேலும் மேம்படுத்த இந்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. இதனால் இந்தியா-லங்கை இடையேயான படகு சேவை நடைமுறைக்கு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am