செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
சென்னை:
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்து குறைவால் தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மளிகை பொருள்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் பல மளிகை பொருள்கள் ரூ. 10 முதல் ரூ. 20 வரை விலை உயா்ந்துள்ளது.
கனமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மளிகை பொருள்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் கொண்டு வரப்படும் மளிகை பொருள்களின் வரத்தும் குறைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் கடந்த பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் கிலோ ரூ. 160-க்கு விற்கப்பட்ட மஞ்சள் தூள் தற்போது ரூ. 222-க்கும், ரூ.122-க்கு விற்கப்பட்ட உளுத்தம் பருப்பு ரூ.145-க்கும், ரூ.155-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ரூ.172-க்கும், ரூ.160- க்கு விற்கப்பட்ட கொண்டை கடலை ரூ.180-க்கும், ரூ.625-க்கு விற்கப்பட்ட மிளகு ரூ.720-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன
இனிவரும் நாள்களில் பருப்பு வகைகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதேநேரத்தில் சீரகம், சோம்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகிய பொருள்களின் விலை சற்று குறைந்துள்ளது. சமையல் எண்ணெய் விலையில் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2024, 1:05 pm
கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்வு: மக்கள் வேதனை
May 12, 2024, 7:26 pm
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது
May 10, 2024, 9:18 am
இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளிவருகிறது
May 10, 2024, 8:54 am
சென்னையைத் துரத்தும் நாய்கள்: ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய்களுக்குத் தடை
May 10, 2024, 8:31 am
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
May 9, 2024, 11:19 am