நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையிலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

சென்னை: 

சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட லோக்மான்ய திலக் விரைவு ரயில் இஞ்சினின் பின்புறம் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
 
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்.12164 பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே செல்லும்போது ரயிலின் இஞ்சினில் இருந்து கரும் புகை வெளிவருவதை பார்த்த பயணிகள் பதறியடித்து ரயிலிலிருந்து வெளியேறினர். சிலருக்கு அடிபட்டு காயமும் அடைந்தனர்.

இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வைரல் வீடியோ பொது மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டுபண்ணியது.

இதனிடையே, தீ விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், "சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட லோக்மான்ய திலக் ரயிலில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை; HOG (ஹெட் ஆன் ஜெனரேஷன்) கப்ளரில் ஏற்பட்ட பிரச்னையால் புகை மட்டுமே வெளியே வந்தது. நீர் உட்புகுதல் காரணமாக HOG கப்ளரில் இருந்து புகை வந்தது.

புகையை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி, பிரச்னையை சரிசெய்தார். புகை அணைக்கப்பட்டுவிட்டதால் ரயில் மீண்டும் பாதுகாப்பாக இயங்க தொடங்கியது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset