நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் சுற்றுலா பயணிகளுடன் மாயம்

லண்டன் : 

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான டைட்டானிக் 1912-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணிக்கும் போது அட்லாண்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 1,600 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாகப் பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலா பயணிகள் சென்றிருக்கலாம் எனத் தகவல் வெளியானது. மாயமான நீர்மூழ்கி கப்பலைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதாரம்: BBC

தொடர்புடைய செய்திகள்

+ - reset