நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செந்தில் பாலாஜி கைது - 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை:

வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிபதி அனுமதி அளித்தார். எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதத்தை தொடர உள்ளனர். ஜாமின் கோரி திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset