செய்திகள் உலகம்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
பெய்ஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.
முன்னதாக சிச்சுவான் மாநிலத்தில் லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.
தற்போது, அவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாநில தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.
தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 11:55 am
“முட்டாள்தனமான செயல்”: ‘NATO’வுக்கு எதிராக அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆவேசம்
March 18, 2026, 10:51 am
ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க உயரதிகாரி பதவி விலகல்
March 18, 2026, 10:49 am
வான்தாக்குதலில் ஈரானின் உயரதிகாரி அலி லாரிஜானி பலி: பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு
March 18, 2026, 9:54 am
மெக்சிகோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு
March 17, 2026, 2:53 pm
எரிபொருள் பற்றாக்குறை - இலங்கையில் 4 நாள் மட்டுமே வேலை
March 17, 2026, 12:59 pm
குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம்: 30 வயது ஆடவர் கைது
March 17, 2026, 11:41 am
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் பலி
March 17, 2026, 11:04 am
எரிசக்தி நெருக்கடி தீவிரம்: கியூபாவில் நாடு முழுவதும் இருள்
March 17, 2026, 10:53 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இங்கிலாந்தின் அணுகுமுறைக்கு டிரம்ப் கடும் அதிருப்தி
March 17, 2026, 10:36 am
