
செய்திகள் உலகம்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
பெய்ஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகி உள்ளனர்.
முன்னதாக சிச்சுவான் மாநிலத்தில் லெஷான் நகருக்கு அருகிலுள்ள ஜின்கோஹேவில் அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் 14 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.
தற்போது, அவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியானது மாநில தலைநகர் செங்டுவில் இருந்து 240 கிமீ (150 மைல்) தொலைவில் உள்ள மலைப்பிரதேசம் ஆகும்.
தொலைதூர மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதி, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடரால் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm