நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெம்ப்ளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1  என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் இரு வெற்றி கோல்களை அதன் முன்னணி ஆட்டக்காரர் இகேய் குண்டகோன் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டி தற்போது எப்ஏ  கிண்ணத்தையும் வென்றுள்ளனர்.

அடுத்து ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணத்தை மென்செஸ்டர் சிட்டி அணியினர்  குறி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset