செய்திகள் இந்தியா
கடவுளுக்கே உபதேசம் கூறுவார் மோடி: ராகுல் விமர்சனம்
சான்டா கிளாரா:
கடவுளைவிட அதிகம் அறிந்தவராக தன்னை நினைக்கும் இந்தியப் பிரதமர் மோடி, அவருக்கே உபதேசம் செய்வார் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ஒருவார கால பயணமாக வந்துள்ள ராகுல், கலிஃபோர்னியா மாகாணத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்த உலகம் மிகப் பெரியது; எந்த நபராலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாதபடி சிக்கலானது. ஆனால், தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்கும் சிலர் இந்தியாவில் உள்ளனர்.
கடவுளைவிட தாங்கள் அதிகம் அறிந்தவர்கள் என்பது அவர்களின் நினைப்பு. இதுவும் ஒருவகையான நோய்தான்.
வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றையும், அறிவியலாளர்களுக்கு அறிவியலையும், ராணுவத்தினருக்கு போர் வித்தைகளையும் அவர்களால் "விளக்க' முடியும்.
கடவுள் அருகே அமர்ந்து, பூமியில் என்ன நடக்கிறது என்றுகூட அவர்கள் விளக்குவர். இதற்கு, நமது பிரதமரும் ஓர் உதாரணம்தான்.
கடவுள் அருகே மோடி அமர்ந்தால், பூமி எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து கடவுளுக்கு அவர் விளக்குவார். தனது படைப்புகள் குறித்து கடவுளே குழம்பிவிடுவார்.
இந்தியாவில் அனைத்து நிர்வாக அமைப்புகளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மக்களை அச்சுறுத்தும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. அனைத்து அரசு அமைப்புகளும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
