
செய்திகள் உலகம்
இம்ரான் கட்சியை தடை செய்ய திட்டம்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்இன்சாஃப் கட்சியினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அந்தக் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவத்துக்குச் சொந்தமான இடங்களிலும், பிற பொது இடங்களிலும் அவரது கட்சியினர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதல்களை இம்ரான் கான் இதுவரை கண்டிக்கவில்லை. ராணுவத்தை அவர் தனது எதிரியாகக் கருதி வருகிறார்.
இதனால் அவரது கட்சியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார்.
அதற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஜாமீன் பெறுவதற்காக அவர் கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு வந்த அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறை வெடித்தது. பின்னர் இம்ரான் கானை உச்சநீதிமன்றம் விடுவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 12:36 pm
மனைவி வீட்டுக்குள் தற்கொலை: தெரியாமல் வாசலில் காத்திருந்த கணவர்
October 15, 2025, 9:58 pm
இந்தியாவில் 3 தரமற்ற இருமல் மருந்துகள்: WHO எச்சரிக்கை
October 15, 2025, 5:54 pm
உலகளாவிய தலைமைத்துவ விருது விழா: தாய்லாந்து அரச இளவரசியால் தொடங்கி வைக்கப்பட்டது
October 14, 2025, 12:53 pm
சிங்கப்பூர் மரீன் பரேட் இலவச இடைவழிப் பேருந்துச் சேவை முடிவுக்கு வருகிறது
October 13, 2025, 12:25 pm
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் டிரம்ப்
October 12, 2025, 6:54 pm
சீனாவுக்கு கூடுதலாக 100 சதவீத வரி: டிரம்ப் மிரட்டல்
October 12, 2025, 3:27 pm
ஐரோப்பியப் பயணமா?: இனி அங்க அடையாள விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்
October 12, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்
October 11, 2025, 12:25 pm