செய்திகள் உலகம்
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக ஜஸ்வந்த் சிங் தேர்வு
லண்டன்:
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் புலம்பெயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் ஜஸ்வந்த் சிங் பிர்டி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am
திங்கள் முதல் மாணவர்களுக்கு மதிய உணவு
March 26, 2024, 10:37 am