
செய்திகள் உலகம்
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக ஜஸ்வந்த் சிங் தேர்வு
லண்டன்:
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் புலம்பெயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் ஜஸ்வந்த் சிங் பிர்டி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2025, 10:43 am
வங்கதேச தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸ் ராஜினாமா?
May 23, 2025, 10:29 am
காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்காக கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவ...
May 23, 2025, 10:22 am
சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி: போக்குவரத்து...
May 22, 2025, 10:01 pm
சிங்கப்பூரில் ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு 5 விரைவுச்சாலைகளில் ERP கட்டண...
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 12:17 pm
அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா செயலாள...
May 22, 2025, 12:10 pm
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 10:37 pm