
செய்திகள் உலகம்
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக ஜஸ்வந்த் சிங் தேர்வு
லண்டன்:
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் புலம்பெயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் ஜஸ்வந்த் சிங் பிர்டி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:26 pm
7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரானில் சவூதி தூதரகம் மீண்டும் திறப்பு
June 6, 2023, 3:52 pm
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கு நாட்டின் உயரிய விருது
June 6, 2023, 2:34 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹஜ்ஜு பெருநாளுக்கு நீண்ட விடுமுறைகள்
June 6, 2023, 1:06 pm
ஓமனில் 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது: தொழிலாளர் அமைச்சகம் நடவடிக்கை
June 6, 2023, 12:32 pm
குவைத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முருங்கை - பிரச்சாரம் துவங்கியது
June 6, 2023, 11:51 am
27 பள்ளி மாணவிகளைக் கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் கைது
June 6, 2023, 9:44 am
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் திடீர் நிலச்சரிவு 14 பேர் பலி - 5 பேர் மாயம்
June 3, 2023, 4:28 pm
மனைவிக்கு 2ஆம் இடம் கிடைத்த ஆத்திரம்: அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த கணவர்
June 3, 2023, 12:32 pm
காணாமல் போன 4 வயது சிறுவன் துணி துவைக்கும் இயந்திரத்தில் பிணமாக மீட்கப்பட்டான்
June 3, 2023, 12:06 pm