
செய்திகள் உலகம்
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக ஜஸ்வந்த் சிங் தேர்வு
லண்டன்:
இங்கிலாந்தின் கவென்ட்ரி நகர மேயராக சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் பஞ் சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் கடந்த 1960-ம் ஆண்டில் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் புலம்பெயர்ந்தது.
கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.
கவென்ட்ரி மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. திறமை, நேர்மையின் அடிப்படையில் மேயரை தேர்வு செய்ய கவுன்சிலர்கள் வாக்களிப்பார்கள்.
அந்த அடிப்படையில் கவென்ட்ரி மாநகராட்சியில் தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும் திறமை, நேர்மையின் அடிப்படையில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சீக்கியர் ஜஸ்வந்த் சிங் பிர்டி மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் 17 ஆண்டுகள் கவுன்சிலராகவும் ஓராண்டு துணை மேயராகவும் பிர்டி பதவி வகித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாநகராட்சியை வழிநடத்துவேன் என்கிறார் ஜஸ்வந்த் சிங் பிர்டி.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am