நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரூ. 2000 நோட்டுகள் வாபஸ் - இரண்டாவது பேரழிவு தொடக்கம்: காங்கிரஸ்

புது டெல்லி:

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவது இரண்டாவது "பேரழிவு' தொடங்கியுள்ளதாக என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், எதையும் செய்த பிறகு சிந்திப்பதே, உலகின் குரு என தன்னை கூறிக் கொள்பவரான பிரதமர் மோடியின் பாணியாகும். கடந்த 2016இல் பேரழிவை ஏற்படுத்திய பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட  ரூ.2,000 நோட்டுகள் இப்போது திரும்ப பெறப்படுகின்றன என்றார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 2016 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட முடிவை மறைக்க  ரூ.2,000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு, சில வாரங்களுக்கு பின் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஏற்பட்டது. இனி, ரூ.1,000 நோட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் வியப்பில்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset