நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

BREAKING NEWS: 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பரிலிருந்து செல்லாது: இந்திய அரசு திடீர் அறிவிப்பு

புதுடில்லி: 

ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை நிறுத்துமாறும் அவை செல்லாது என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் செப்.30 வரை 2000 நோட்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 இல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. 

அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார்.

கள்ள நோட்டு ஒழிக்கப் போவதாகக் கூறி புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் ஒன்றிய அரசின் ஆணைப்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

நாளடைவில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. பின்னர் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

* கிளீன் நோட் பாலிஸி என்ற அடிப்படையில் ரூ. 2000 நோட்டுகளை திரும்பப்பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை வங்கிகள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

* கையிருப்பில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை வரும் 23 ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம். ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ளலாம்.

* ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் செப். 30-ம் தேதி வரையே செல்லுபடியாகும்.

*சாதாரண பரிவர்த்தனைகளில் ரூ. 2000 நோட்டு பயன்படுத்துவது குறைந்துள்ளதையடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

*புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுகள் தேவைக்கு போதுமானதாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset