செய்திகள் இந்தியா
கவிழ்ந்த சீன மீன்பிடி படகை தேடும் பணியில் இந்தியா
புது டெல்லி:
இந்திய பெருங்கடலில் சீன மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் மாயமான நிலையில், படகை தேடும் பணியில் இந்திய கடற்படையின் பி8ஐ விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் மீன்பிடி படகு செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள், 5 பிலிப்பின்ஸ் நாட்டவர் இருந்தனர். விபத்துக்குப் பிறகு அந்த 39 பேரும் மாயமாகினர்.
அவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வியாழக்கிழமை தெரிவித்தார்.
படகை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளிடம் சீனா உதவி கோரியது.
இதையடுத்து, இந்திய கடற்படையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடற்படையின் ரோந்து விமானமான பி8ஐ மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் 900 கடல்மைல் தொலைவுக்கு இந்த தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு உரிய உதவியும், ஒத்துழைப்பும் அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm