செய்திகள் இந்தியா
விடுவிக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் புது யோசனை
புது டெல்லி:
குஜராத் கலவரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் சிலரை கண்டுபிடிக்க முடிவில்லை என்பதால் வழக்கு விசாரணை தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற மதக் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை த மே 2ஆம் தேதி நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா, அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தபோது, சில குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர்களது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் கூறினர்.
அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது என்று அனைத்து குற்றவாளிகளும் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குற்றவாளி ஒருவரின் வீடு பூட்டப்பட்டும், அவரது கைப்பேசி அணைக்கப்படும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், கண்டுபிடிக்க முடியாத குற்றவாளிகளுக்கு குஜராத்தி, ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரமாக நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும் என்று கூறி, வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள கேஎம்.ஜோசப் ஜூன் 16ஆம் தேதி முதல் ஓய்வு பெறுவாதல் புதிய அமர்வு இந்த வழக்கின் அடுத்த விசாரணையை விசாரிக்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm