நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரச்சாரம் ஓய்ந்த பிறகும் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு: காங்கிரஸ் புகார்

புது டெல்லி:

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பின்னர், விதிமுறைகளை மீறி வாக்கு கேட்டு விடியோ வெளியிட்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

தேர்தல் பிரச்சார திங்கள்கிழமை நிறைவடைந்தது. அதன் பின்னர் எவரும் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதிமுறை.

ஆனால், பிரதமர் மோடி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோபதிவில், நாட்டில் கர்நாடகத்தை முதல் மாநிலமாக்கும் பணிக்கு கன்னடர்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த காணொலி மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பிரதமர் மீறியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலர் ரண்தீப் சுர்ஜேவாலா தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset