நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

யங்கூனுக்கும் சென்னைக்கும் நேரடி விமானச் சேவை தொடங்கியது 

யங்கூன்:

மியான்மர் தலைநகர் யங்கூனுக்கும் (Yangon) சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவை  தொடங்கியுள்ளது,

நேற்று முன்தினம் (7 மே) Myanmar Airways International நிறுவனம் அந்த அறிவிப்பை  வெளியிட்டது.

கடந்த சனிக்கிழமை  அந்த விமானச் சேவையைத் தொடங்கியது.

சுமார் 48 பயணிகள் யங்கூனிலிருந்து சென்னைக்கும் சுமார் 70 பயணிகள் சென்னையிலிருந்து யங்கூனுக்கும் பயணம் மேற்கொண்டனர்.

அந்தப் புது விமானச் சேவையின் மூலம் பயணிகள் சென்னையிலிருந்து மியன்மாருக்கு எளிதில் பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் அந்த விமானச் சேவை இரு நாடுகளின்
வணிகத்துறை, சுகாதாரத்துறை, பயணத்துறை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு தமிழகத்திற்கு நேரடியாக விமான சேவை இல்லாதிருந்தது.

இனி கொல்கொத்தாவுக்கு சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் சென்னைக்கு போக வேண்டியதில்லை.

அல்லது பர்மியர்கள், கோலாலம்பூர் வந்தோ, அல்லது பேங்காக் சென்றோ தான் சென்னைக்கு செல்ல வேண்டும். இனி அந்த நிலை இருக்காது என்று மியான்மர்வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset