நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் பெண் பயணியை கொட்டிய தேள்

மும்பை:

மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியதில் வலியுடன் பயணித்து உள்ளார்.

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. 

ஏ.ஐ. 630 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை திடீரென நடுவானில் வைத்து தேள் ஒன்று கொட்டியுள்ளது.

இதில், அவர் வலியால் அலறி துடித்து உள்ளார். இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, விமானம் தரையிறங்கியதும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பின் அந்த பெண் வீடு திரும்பினார். எங்களுடைய அதிகாரிகள் அவருடன் மருத்துவமனைக்கு சென்றனர். 

அவர் வீடு செல்லும் வரை அனைத்து வித உதவிகளையும் செய்தனர் என கூறியுள்ளார்.

விமானத்தில் தேள் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து வருவதாக விமான நிறுவன பேச்சாளர் கூறினார்.

ஆதாரம்PTI

தொடர்புடைய செய்திகள்

+ - reset