செய்திகள் இந்தியா
இந்தியாவின் விருந்தினர் என்றும் பாராமல் பிலாவல் பூட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று விமர்சித்த ஜெய்சங்கர்
புது டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாக விமர்சித்தார்.
கோவாவின் பெனௌலிம் பகுதியில் அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் சீன வெளியுறவு அமைச்சர் கின் காங், ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி, பயங்கரவாதம் குறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக மட்டும் பேசவில்லை.
பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேநஸீர் புட்டோ எனது தாயின் மகனாகவும் பேசுகிறேன்.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் பிராந்திய மற்றும் உலகளாவிய நடவடிக்கைகளில் அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிக்க விரிவான அணுகுமுறை மட்டுமின்றி, கூட்டு அணுகுமுறையும் தேவை.
ராஜீய ரீதியில் ஆதாயமடைவதற்கான ஆயுதமாக பயங்கரவாதத்தை பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் எவரும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றார்.
மாநாட்டிற்கு பிறகு ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர், நியாயப்படுத்துபவர், அதன் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில், பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தனது நிலைப்பாட்டை பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் புட்டோ எஸ்சிஓ கூட்டத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை கையாள்வதில் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை, அந்நாட்டின் அந்நிய செலாவணி மதிப்பைவிட வேகமாக சரிந்து வருகிறது என்றும் ஜெய்சங்கர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் அமைச்சர் என்றும் பாராமல், இந்தியாவின் விருந்தினர் என்றும் கருதாமல் பிலாவல் பூட்டோவை பயங்கரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என்று ஜெய்சங்கர் கடும் விமர்சனம் செய்ததை பன்னாட்டு அமைச்சர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm