நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடக ஊழல் குறித்தோ அடித்த கொள்ளைக் குறித்தோ பிரதமருக்கு தெரியாதா?: பிரியங்கா கேள்வி

பெங்களூரு:

கர்நாடக பாஜக அரசின் ஊழலைப் பற்றியும் அடித்த கொள்ளை மட்டும் பிரதமர் மோடிக்கு தெரியாதா என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா பேசுகையில்,

பிரதமர் மோடி கர்நாடகத்தை மேம்படுத்த வேண்டியது தனது கனவு என்கிறார்.

அந்தக் கனவை அவரால் ஏன் இதுவரை நிறைவேற்ற முடியவில்லை?
எல்லாம் அறிந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகத்தில் நடக்கும் பாஜக அரசின் 40 சதவீத கமிஷன் ஊழல் பற்றி மட்டும் தெரியாமல் இருக்கிறதா?

ஊழலில் ஈடுபட்டு கொள்ளையடித்த பாஜகவினர் யாரையும் அவர் தடுக்காதது ஏன்?

கடன் தொல்லையால்  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது பற்றி பிரதமர் எதுவும் கூறாமல் மவுனமாக இருப்பது ஏன் என்று சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset