நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவு

மும்பை:

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி 89 வயதில் மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரத்தில் 1934இல் அருண் காந்தி பிறந்தார். அவருடைய பெற்றோர் மணிலால் காந்தி - சுசீலா மாஷ்ருவாலா ஆவர்.

தாத்தா மகாத்மா காந்தியின் வழிகளைப் பின்பற்றிய அவர், ஒரு சமூக ஆர்வலராக திகழ்ந்தார்.

அவரது மனைவி சுனந்தா கடந்த 2007இல் காலமானார். அவர்களுக்கு துஷார் காந்தி, அர்ச்சனா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

அருண் காந்தியும் அவரது மனைவியும் இணைந்து அமெரிக்காவின் மெம்பிஸில் உள்ள கிறிஸ்தவ சகோதரர்கள் பல்கலைக்கழகத்தில் அகிம்சைக்கான எம்.கே.காந்தி நிறுவனத்தை 1991இல் தொடங்கினர்.

உலக சமயங்களின் நாடாளுமன்ற வாரிய குழு உறுப்பினராக அருண் காந்தி கடந்த 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset