செய்திகள் இந்தியா
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்
மும்பை:
கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அந்த நிறுவனத்தின் விமான சேவைகள் மே 3, 4ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அதன் தலைவர் கௌசிக் கோனா தெரிவித்தார்.
திவால் நடவடிக்கையை தொடங்கும் வகையில் தில்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கௌசிக் கோனா மேலும் கூறுகையில், திவால் நடைமுறையை மேற்கொள்ள விண்ணப்பித்தது யாரும் எதிர்பாராத முடிவு. எங்களது நிறுவனத்தின் நலனைப் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மே 3, 4ஆம் தேதிகளில் விமான சேவை ரத்து செய்யப்படும் நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும்போது, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.
கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த விமான நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm