நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிப்பு  

பெங்களூரு: 

கர்நாடகாவில் அரசியல் கூட்டம் ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டத்தில் ஒலியேறிக்கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக கன்னட நாட்டு  கீதத்தை பாட வைத்த கர்நாடகா அரசியல்வாதி ஈஸ்வரப்பாவின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சிவமோகா நகரில் தமிழர்கள் இடையே நடந்த வாக்கு சேகரிப்பு கூட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்த் திரையிசை உலகின் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset