நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எலிகள் மூலம் பரவும் ஒமிக்ரோன் உருமாறியக் கோவிட்-19 தொற்று: வேலூர் சி.எம்.சி. விஞ்ஞானிகள் ஆய்வு

வேலூர்:

கடந்த 2021-ஆம் ஆண்டு தைவான் நாட்டில் உள்ள ஓர் ஆய்வு மையத்தில் தனிமையிலிருந்த இளம் பெண்ணுக்குக் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு எப்படி கோவிட்-19 தொற்றுப் பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அப்பெண்ணை எலி கடித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் அப்பெண்ணுக்கு எலியின் மூலம் கோவிட்-19 பரவியதா என்ற கேள்வி உண்டாகியது.

இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமிக்ரோன் வகையான உருமாறிய கோவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி, பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமிக்ரோன் கிருமி தோன்றியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களைப் பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்புள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சிக் காட்டுகிறது. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் தொற்று நோய்கள் அவைகளுக்குள் வேகமாகப் பரவி பின்னர் மனிதனுக்குப் பரவுகிறது. பின்லாந்து நாட்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் கோவிட் தொற்று நோயால் எலிகள் எளிதில் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். 

நெதர்லாந்து நாட்டில் வெள்ளெலிகளுக்குள் ஒமிக்ரோன் வைரஸ் ஒன்றுக்கொன்று பரவி பின்னர் அவற்றிலிருந்து மனிதர்களுக்குப் பரவியது தெரியவந்துள்ளது.

மேலும், எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் பரவினாலும் எலிகளுக்கு இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன. அதன் மூலம் மனிதனுக்குக் காற்றில் ஒமிக்ரோன் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் கோவிட்-19 பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் 3 வகையான உருமாறிய கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

79 எலிகளைச் சோதனை செய்ததில், 16 எலிகளுக்குக் கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமிக்ரோன் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்' என அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இஃது அரிதானது. எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.

அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset