செய்திகள் இந்தியா
ராகுலின் வழக்கு விசாரணையில் இருந்து பெண் நீதிபதி விலகல்
அகமதாபாத்:
ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி விலகியுள்ளார்.
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத்தின், சூரத் பெருநகர நடுவர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல், கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரிய ராகுலின் மனுவை ஏற்கவும், தீர்ப்புக்கு தடை விதிக்கவும் மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி கீதா கோபி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை அவசரமாக விசாரிக்க ராகுல் தரப்பு வழக்குரைஞர் பி.எஸ்.சம்பானேரி கோரினார்.
ஆனால், விசாரணையில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார். அதற்கான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 6:53 pm
உக்ரைனுக்கு இந்தியா பீரங்கி குண்டுகள் வழங்கியதால் ரஷ்யா அதிருப்தி
September 20, 2024, 6:11 pm
திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதி
September 20, 2024, 12:44 pm
ஓடும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி
September 19, 2024, 8:49 pm
ஜம்மு காஷ்மீரில் குறைந்த வாக்குப் பதிவு
September 19, 2024, 12:31 pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பா? ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
September 18, 2024, 5:11 pm
டெல்லியின் புதிய பெண் முதல்வர் அதிஷி
September 18, 2024, 5:05 pm
புல்டோசர் நடவடிக்கைக்கு அக்டோபர் வரை உச்சநீதிமன்றம் தடை
September 15, 2024, 5:52 pm
2 நாளில் பதவி விலகுகிறேன்: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு
September 15, 2024, 2:07 pm
6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார் தில்லி முதல்வர்: சிபிஐக்கு கண்டனம்
September 13, 2024, 9:11 pm