நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா - சீனா இடையே விரைவில் நேரடி விமான சேவை

புது டெல்லி: 

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து இரு நாடுகளும்  ஆலோசித்தன.

தில்லியில் நடைபெற்ற ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற சீனா அதிகாரிகளுடன் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இதுகுறித்து ஆலோசித்தார்.

பல்வேறு துறைகளிடம் கலந்து ஆலோசித்தபிறகே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset