செய்திகள் இந்தியா
சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
புது டெல்லி:
ஆப்பரேஷன் காவேரி திட்டத்தின் கீழ், சூடானிலிருந்து முதல்கட்டமாக கப்பல் மூலம் 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 400க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
சூடானில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க இந்திய அரசு, ஆப்பரேஷன் காவேரி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், சூடானில் உள்ள போர்ட் சூடான் நகரில் இருந்து இந்திய கடற்படையின் சுமேதா கப்பல் மூலம், முதல்கட்டமாக 278 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
சூடானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்கு இந்திய விமானப் படையின் 2 விமானங்கள் ஜித்தாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. 278 இந்தியர்கள் அந்த விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm