செய்திகள் இந்தியா
ஜெமினி சர்க்கஸின் நிறுவனர் சங்கரன் காலமானார்
கோழிக்கோடு:
இந்தியாவில் புகழ் பெற்ற ஜெமினி சர்க்கஸின் நிறுவனர் ஜெமினி சங்கரன், கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது மூப்புக் காரணமாக காலமானார்.
பல்வேறு சர்க்கஸ் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி வந்த சங்கரன் மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த வியா சர்க்கஸ் நிறுவனத்தை 1951 ஆண்டு ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கினார்.
அதனை ஜெமினி சர்க்கஸ் என மறுபெயரிட்டு வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
பின்னர் ஜம்போ சர்க்கஸ் என தனியாக ஒரு நிறுவனத்தையும் அவர் தொடங்கினார்.
மேலும் கிரேட் ராயல் சர்க்கஸ் உள்பட 5 சர்க்கஸ் நிறுவனங்களை ஒரே நேரத்தில் நடத்தி வந்தார்.
சர்க்கஸ் துறைக்கு சங்கரன் ஆற்றிய பங்கைப் பாராட்டி "வாழ்நாள் சாதனையாளர்' விருதை ஒன்றிய அரசு வழங்கி உள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் உடல் செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டுள்ளது.
அவரின் இறுதி சடங்குகள், கண்ணூர் பையாம்பலம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm