செய்திகள் இந்தியா
26 மாநிலக் கட்சிகள் ரூ.189 கோடி நன்கொடை
புது டெல்லி:
2021-22ஆம் ஆண்டில் பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 மாநில கட்சிகள் ரூ.189 கோடிக்கு நேரடியாக நன்கொடை பெற்றுள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், காசோலை, வரைவோலை, வங்கிப் பரிமாற்றம், ரொக்கப் பணம் ஆகியவை வாயிலாக 26 மாநிலக் கட்சிகள் ரூ.189 கோடிக்கு நன்கொடை பெற்றுள்ளன.
பிஆர்எஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகளுக்கு மட்டும் 85 சதவீதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதிகபட்சமாக பிஆர்எஸ் கட்சி ரூ.40.90 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி ரூ.38.24 கோடியும், ஐக்கிய ஜனதா தளம் ரூ.33.25 கோடி, சமாஜவாதி கட்சி ரூ.29.79 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடி பெற்றுள்ளன.
2021-22ஆம் நிதியாண்டில் திமுக ரூ.2.14 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
அதிமுக, பிஜு ஜனதா தளம், பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை எந்த நேரடி நன்கொடையும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm