செய்திகள் இந்தியா
இந்திய பிபிசி மீது அமலாக்கத் துறை வழக்கு
புது டெல்லி:
பிபிசி இந்தியா ஊடக நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நடத்தி 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மீது அந்நியச் செலாவணி மீறல் வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்து, இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு பிபிசி இந்தியா நிறுவன அதிகாரிகளை அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டதாகவும், அதையடுத்து, பிபிசி துணை நிர்வாக ஆசிரியர் ஒருவர், அமலாக்கத் துறை விசாரணை அதிகாரிகள் முன்பாக வியாழக்கிழமை ஆஜரானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து "இந்தியா: தி மோடி க்வஸ்டீன்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது.
அந்த ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடந்த ஜனவரி 21ஆம் தேதி தடை விதித்தது.
"கொடுங்கோல் ஆட்சியை நடைமுறைப்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளது' என்று பிபிசி இந்தியா நிறுவனத்தின் மீதான அமலாக்கத்துறை வழக்குப் பதிவு குறித்து காங்கிரஸ் விமர்சனம் செய்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm