நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானப் பணிப்பெண்ணை தாக்கிய பயணி கைது: லண்டன் புறப்பட்ட விமானம் டெல்லிக்கு திரும்பியது

புது டெல்லி:

தில்லியிலிருந்து லண்டனுக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் விமானப் பணிப் பெண்களைத் தாக்கியதால் அந்த விமானம் மீண்டும் திரும்பியது.

அத்துமீறலில் ஈடுபட்ட அந்தப் பயணி போலீஸில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 25 வயதுடைய பயணி ஜஸ்கிராத் சிங்  வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு, விமான ஊழியர்கள் இருவரை தாக்கினார்.

அதன் காரணமாக, புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானம் மீண்டும் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்தப் பயணி விமானநிலைய காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீஸார்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், ஏர் இந்தியா விமானம் 225 பயணிகளுடன் திங்கள்கிழமை காலை 6.35 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டது.

பயணி அத்துமீறலைத் தொடர்ந்து மீண்டும் தில்லிக்கு திரும்பிய விமானம், காலை 9.40 மணிக்கு தரையிறக்கப்பட்டது' என்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset