செய்திகள் தமிழ் தொடர்புகள்
+ 2 கணிதத் தேர்வில் தவறான கேள்வி: கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத் துறை முடிவு
சென்னை:
பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்.3-ம் தேதி நிறைவு பெற்றது. இதில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாளில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதாவது பொருத்தமற்ற வகையில் ‘ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க’ என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு கருணை மதிப்பெண்
வழங்க ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர்வுத் துறை மறுப்பு தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்புகள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை தற்போது முன்வந்துள்ளது.
இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், ‘பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 கணிதப் பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கருணை மதிப்பெண் அறிவிப்பு மாணவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm