
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது: டத்தோஸ்ரீ சரவணன்
திருச்சி:
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கள், புலவர்களின் பங்கு அளப்பறியது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு இணைப்பே இலக்கியம் எனும் கருப்பொருளில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு திருச்சியில் நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேருரையாற்றவுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதுடன் வாழ்த்துரை வழங்க டத்தோஸ்ரீ சரவணன் இன்று திருச்சி வந்தடைந்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத், டத்தோஸ்ரீ சரவணனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சியை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் இலக்கிய மேம்பாட்டிற்கு இஸ்லாமிய அறிஞர்கக், புலவர்களின் பங்கு அளப்பறியது.
அதன் அடிப்படையில் இம்மாநாடு நிச்சயம் வெற்றி மாநாக அமையும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm