
செய்திகள் தமிழ் தொடர்புகள்
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
திருச்சி:
அடுத்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு இறைவன் நாடினால் மலேசியாவில் நடைபெறும்.
இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் இதனை கூறினார்.
9ஆவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இம்மாநாட்டின் வெற்றியை கொண்டாடும் ஏற்பாட்டாளர்கள், இதில் உள்ள விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நிறைகுறைகளை ஆராய வேண்டும்.
குறிப்பாக இம்மாநாடு வெறும் பாராட்டு விழாவாக இருக்கக் கூடாது. அதுவும் அவசியம் தான்.
ஆனால் தமிழையும் இலக்கியத்தையும் பாதுகாப்பதுடன் அதை வளர்ப்பதும் தான் இம்மாநாட்டின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய மலேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ காவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்கள் அடுத்த மாநாட்டை மலேசியாவில் நடத்த வேண்டும் என பரிந்துரைத்தார்.
அவரின் பரிந்துரையை ஏற்று இங்கு வந்துள்ள மலேசியப் பேராளர்களின் ஆதரவுடன் மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்த மலேசியா தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm