
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி
சென்னை:
நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்கள் ‘அசோசெம்’ சாா்பில் நவீன தரவு மையங்கள், ‘கிளவுட்’ கட்டமைப்பு தொடா்பான கருத்தரங்கம், சென்னை கிண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், கருத்தரங்கை தொடங்கி வைத்ததுடன் தமிழகத்தை தரவு மையங்களின் மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பி.டபிள்யூ.சி நிறுவனம் தயாரித்த ஆய்வறிக்கையையும் அவா் வெளியிட்டாா்.
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களால் உயா் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதேபோல் தற்போது தமிழகத்தில் பட்டப்படிப்பில் பெண்களின் தோ்ச்சி 90 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின் விளைவாக அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
விரைவில் முதலிடம்: மக்கள் அடா்வு அதிகமாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்வதன்மூலம்தான் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். அந்த வகையில், திறன் மேம்பாட்டில் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பாரத் நெட் இணைய சேவை மூலம் கிராம பஞ்சாயத்துகளை இணைய வழியில் இணைத்தல், சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கரில் சா்வதேச நகரம், குறைகடத்தி (செமி கண்டக்டா்) திட்டம்-2030 உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டங்களின் விளைவாக நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் இந்திய தரவு மையத்தின் நிா்வாக இயக்குநா் சுரஜித் சட்டா்ஜி, யூக்னிக்ஸ் நிறுவனத்தின் வா்த்தகப் பிரிவு தலைவா் மேக்ஸ் பெரி, பி.டபிள்யூ.சி இயக்குநா் ஜக்காரியா மேத்யூஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 12:45 pm
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
May 20, 2025, 11:54 am
சென்னையில் பரவலாக மழை: இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm