
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
திருச்சி:
இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளும் பயங்கரவாதம் தான். இதற்கு யார் முடிவு கட்டப் போவது.
தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் இக்கேள்வியை முன்வைத்தார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர்,
இஸ்லாமிய இலக்கியம் என்பது
தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டது.
இதனால் இஸ்லாத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது.
அதே வேளையில் இஸ்லாம் என்றால் சகோதரத்துவம் என்று பொருள்.
இந்த சகோதர்த்வத்தை முன்னுரிமையாக கொண்டிருக்கும் மார்க்கமான இஸ்லாம் பயங்கரவாதத்தை எப்படி ஆதரிக்கும்?
இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
ஏன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களும் அதே கொள்கையுடன் தான் உள்ளனர்.
அதே வேளையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டு தான் உள்ளது.
ஒரு சில கும்பல் செய்வது பயங்கரவாதம் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகளும் பயங்கரவாதம் தான்.
ஆக அனைத்து மக்களுக்கும் எதிரான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தொல் திருமாவளவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:50 am
சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ஷியா காஜி உள்ளிட்டோர் கைது
June 20, 2025, 3:39 pm
சன் டி.வி. கலாநிதி மாறன் குடும்பத்தில் சண்டை
June 20, 2025, 7:14 am
தமிழகத்தில் ஜூன் 25-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
June 19, 2025, 7:30 pm
ஏடிஜிபி கைதுக்கு உத்தரவிட்ட நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
June 19, 2025, 10:21 am
தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
June 17, 2025, 2:38 pm
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
June 16, 2025, 8:49 am
குணா குகையில் 500 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட குரங்கு: வைரலாகும் காணொலி
June 15, 2025, 5:02 pm