
செய்திகள் தமிழ் தொடர்புகள்
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
திருச்சி:
தமிழ் முஸ்லிம் மக்களின் வரலாறுகள் ஒருபோதும் மறைக்கப்படக் கூடாது. அதற்கு நாம் அனுமதிக்கவும் கூடாது.
தமிழ்நாட்டின் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்எச் ஜவாஹிருல்லா இதனை கூறினார்.
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சியில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர்,
இஸ்லாம் வன்முறையும் போரையும் போதித்தது இல்லை. இஸ்லாம் பற்றி தெரியாதவர்கள் அப்படி சொல்வார்கள்.
உண்மையில் இஸ்லாம் அன்பையும் பாசத்தையும் ஒழுக்க நெறியையும் போதிக்கிறது.
இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறுகள் மறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.
ஏன் இந்தியாவின் மத்திய அரசு அரசு அமல்படுத்த துடிக்கும் புதிய கல்வி கொள்கையில் இம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அந்த புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
நாமும் அதற்கு துணை நிற்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:11 pm
சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் சுருக்கமான பார்வை
June 29, 2025, 6:34 pm
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது: இந்திய வானிலை மையம்
June 29, 2025, 11:12 am
பாமக தேர்தலுக்காக உருவான கட்சி அல்ல; ராமதாஸ், அன்புமணியை சந்தித்து பேசுவேன்: சீமான்
June 28, 2025, 6:08 pm
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
June 28, 2025, 12:52 pm
புதுச்சேரி அரசியலில் திடீர் பரபரப்பு: பாஜக அமைச்சர், 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா
June 28, 2025, 12:44 pm
மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு
June 27, 2025, 11:01 am
அண்ணா பெயரையே அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்
June 26, 2025, 10:17 pm