
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இராமநாதபுரம் விமான நிலையப் பணிகளை துரிதப்படுத்துக; பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தேவை: ஒன்றிய அமைச்சரிடம் நவாஸ்கனி எம். பி. கோரிக்கை
புதுடெல்லி:
இராமநாதபுரம் மாவட்ட விமான நிலையப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், மலேசியாவின் பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என எழுப்பிய கேள்விக்கு விரைவில் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என பதிலளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து ராமநாதபுரம் விமான நிலையப் பணிகளை துரிதப்படுத்தி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கைகளை விரைந்து செய்திட வேண்டும் என நவாஸ் கனி கேட்டுக் கொண்டார்.
"எனது தொகுதிக்குட்பட்ட பலர் மலேசியாவில் பணி புரிபவர்களாக, வணிகரீதியாக வசிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் வகையில் பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
"எனவே அவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டார்.
அதேபோல சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையையும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm